நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே திரையரங்கில் பயங்கர தீ விபத்து

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று அதிகாலை திரையரங்கில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திரையரங்கம் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.

News image

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே திரையரங்கில் பயங்கர தீ விபத்து

Updated On :5 ஜூலை 2022, 6:21 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இன்று அதிகாலை திரையரங்கில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. திரையரங்கம் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே அதிகாலையில் தனியார் திரையரங்கு ஒன்றில் மின்கசிவு காரணமாக  ஏற்பட்ட தீ விபத்தில் திரையரங்கு முழுவதுமாக  தீக்கிரையானதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள சுமதி மினி திரையரங்கத்தில் தற்போது அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு காட்சியை முடித்துவிட்டு வழக்கம் போல் ஊழியர்கள் தியேட்டரை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து மள மளவென திரையரங்கின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளது. 

தீ பற்றி எரிவதைக் கண்ட காவலாளி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோளிங்கர் மற்றும் அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் திரையரங்கம் முழுவதுமாக தீக்கிரையானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.