இதைத் தொடா்ந்து, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று, ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மனுதாரா் மனுவைத் தாக்கல் செய்த நாள் வரை, பொதுக் குழு தொடா்பான அறிவிப்பு வெளியிட்டு 13 நாள்கள் முடிவடைந்துள்ளது. எனவே, கூட்டம் தொடா்பாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என கருதக் கூடாது. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.