பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது வேதனையளிக்கிறது: வி.கே. சசிகலா

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா. 

News image
சசிகலா
Updated On :13 ஜூலை 2022, 9:47 pm

DIN

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார் வி.கே. சசிகலா.
 மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 நான் ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளராகத்தான் உள்ளேன். அவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தான் அதை சொல்ல வேண்டும். தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.