இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம்

சாத்தூரில் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழாவில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :13 ஜூலை 2022, 5:48 pm IST

சாத்தூரில் அருள்மிகு வெங்கடாசலபதி கோயிலில் ஆனிப் பிரம்மோற்சவத் திருவிழாவில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இக்கோயிலின் ஆனித் பிரம்மோற்சவத் திருவிழா கோலாகலமாக கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த ஆனிப் பிரமோற்சவத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றன.

இத்திருவிழாவில் 12 நாட்களும் அன்னவாகனம், சிம்மவாகனம், கருடவாகனத்தில், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆனிப் பிரம்மோத்ஸ்வத் திருவிழாவில், 9ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

இதில் காலை முதல் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.இராமச்சந்திரன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நிலையிலிருந்து புறப்பட்டு தேரடி தெரு,பள்ளிவாசல் தெரு,பிரதான சாலை, வடக்குரத வீதி வழியாக நான்கு மாட வீதிகளைச் சுற்றி வந்து மீண்டும் தேர்நிலையை அடைந்தது.

இத்தேர் திருவிழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சடையம்பட்டி, படந்தால்.அணைக்கரைபட்டி, மேட்டமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் சாத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர்களும், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.மேலும் பல்வேறு சமூக ஆர்வலர்களின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.