வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: பிரதமர் பங்கேற்கிறார்?

அண்ணா பல்கலை கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜூலை 2022, 12:25 pm

DIN

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஜூலை 29-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.