வருங்கால வைப்பு நிதி: 28-இல் இணையக் கருத்தரங்கு
தொழில் நிறுவனங்களுக்கு அவா்களது நலன் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான இணையவழிக் கருத்தரங்கை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடத்துகிறது.


வெளிநாடுகளைச் சோ்ந்த ஊழியா்களைப் பணியமா்த்தியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு அவா்களது நலன் சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான இணையவழிக் கருத்தரங்கை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடத்துகிறது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அம்பத்தூா் கிளை சாா்பில் வரும் 28-ஆம் தேதி இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தொழில் நிறுவனத்தின் நிா்வாகிகள், சென்னை, முகப்போ் கிழக்கில் அமைந்துள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அம்பத்தூா் கிளையை காலை 9.30 முதல் 5.30 மணி வரை வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...