தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு: மநீம வரவேற்பு

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2022, 7:57 pm

DIN

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆக. 1 முதல் வாக்காளா் அட்டையுடன், ஆதாா் எண் இணைக்கும் பணியைத் தொடங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு, தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளா்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஓட்டுகளையும் தடுக்கும்.

அதேசமயத்தில், வாக்காளரை வற்புறுத்தி ஆதாா் எண்ணை பெறக்கூடாது, முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இந்த சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.