2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்

சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, இரண்டு புதிய கண்ணாடியால் ஆன மின் தூக்கிகள் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்
Updated On :26 ஜூலை 2022, 9:06 am

DIN


சென்னை: சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, இரண்டு புதிய கண்ணாடியால் ஆன மின் தூக்கிகள் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மின் தூக்கியும் தலா 20 பேரை தூக்கிச்செல்லும் திறன் படைத்ததாகவும், 360 டிகிரி கோணத்தில் உள்ளேயிருந்து விமான நிலையத்தை பார்க்கும் வகையில் கண்ணாடியால் ஆனதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகள் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், வருகை, புறப்பாடு மற்றும் உள்ளூர், வெளிநாட்டு விமான முனையங்களுக்கு மிக எளிதாகச் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகளுக்கு உள்ளேயிருக்கும் வெளியேயிருந்தும் பார்க்க முடியும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.