தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆளுநர் பதவி பயனற்றது: திமுக

ஆளுநரின் பதவி குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசியது பற்றி....

News image
திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை- X | Saravanan Annadurai
Updated On :6 மார்ச் 2026, 9:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆளுநர் பதவி பயனற்றது என திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை (மார்ச் 5) திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.

இது குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை பேசுகையில், “ஆளுநர் பதவி பயனற்றது. மாநில அரசாங்கத்துக்கு எதற்கு ஆளுநர்? அவர் மத்திய அரசின் முகவராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுகிறார். ஆளுநர் ஆா்.என். ரவி இடமாற்றம் செய்யப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக, கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாகப் பதவி வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.