டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருவள்ளூர் மாணவியின் சடலம் உடல் கூறாய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல், கூறாய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் மாணவியின் சடலம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:53 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவியின் சடலம் உடல் கூறாய்வுக்கு பின் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்தக் கிராமத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூஷணம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (17) விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை விடுதி அறையில் சரளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.

Story image

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் விடியோ பதிவுடன் மருத்துவக்குழுக்களால் உடல் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாணவியின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்தனர். அதையடுத்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி எம்.சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சீபாஸ் கல்யாண், சார் ஆட்சியர் மகாபாரதி, காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் துரைப்பாண்டியன், சந்திரதாசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), சந்திரன்(திருத்தணி) உள்ளிட்டோர் மாணவியின் சகோதரர் சரவணன் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் பள்ளி மாணவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

அப்போது, மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை எங்கள் முன்பு வெளியிடவும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பதைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்திற்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.