டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார்.

News image
வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN


செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகள் அனைத்தும் நேரலையிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறவுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். முன்னதாக மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணையும் முதல்வர் திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து அரங்குகளை பார்வையிட்ட முதல்வர், இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள அணிகளின் வீரர்க்ளை சந்தித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை ராஜாமுத்தைய்யா சாலையில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.