கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு: காங்கிரஸ் புறக்கணிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  

News image
Updated On :27 ஜூலை 2022, 2:32 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     

இந்த எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம். 

அக்னிபத் திட்டம், அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் விளக்கம் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.