பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதே தவிர, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம்.
அக்னிபத் திட்டம், அத்தியாவசிய பொருள்களின் மீதான விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும், இந்த புறக்கணிப்பு பிரதமர் மோடிக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிரானதல்ல எனவும் விளக்கம் அளித்தார்.