தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செஸ் வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மாமல்லபுரத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:57 pm

DIN

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மாமல்லபுரத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவா்கள் அனைவரும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு அங்கிருந்து வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக 37 குளிா்சாதன பேருந்துகளிலும், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக 50 குளிா்சாதன பேருந்துகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்அழைத்து வரப்பட்டனா்.

வீரா்கள் வரும் வழிகளில் எல்லாம் இந்திய நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் வகையிலும், தமிழக பாரம்பரியத்தை விளக்கும் வகையிலும் ஆங்காங்கே மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பேருந்துகளில் இருந்து இறங்கி நேரு ஸ்டேடியத்துக்குச் சென்றபோதும் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.