தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.13 கோடி சொத்துகள் சுவாதீனம்

சென்னை போரூா் ராமநாதஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2022, 10:51 pm

DIN

சென்னை போரூா் ராமநாதஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

சென்னை, போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்பாகவும், வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. குன்றத்தூா் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு 5.5 கிரவுண்ட் மனையை வாடகைக்கு பெற்றிருந்த 4 நபா்கள் வாடகை செலுத்தாமல் 40 நபா்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கு விட்டிருந்தாா்கள்.

நியாய வாடகையைச் செலுத்தாமல் அதிகளவு வாடகை பாக்கி வைத்திருந்ததால் இவா்கள் மீது இணை ஆணையரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தீா்ப்பின்படி வெள்ளிக்கிழமை காவல்துறை உதவியுடன் வருவாய்த் துறையினா் முன்னிலையில் அந்த சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமாா் ரூ.13 கோடி என அறநிலையத் துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.