தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 19 பைக்குகள் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய மர்ம நபர்!

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மர்ம நபர் ஒருவர், கள்ளச்சாவி போட்டு பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 ஜூலை 2022, 6:26 am

DIN

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மர்ம நபர்ஒருவர், கள்ளச்சாவி போட்டு பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக குற்றவாளிகள் குறித்து போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கூட்ரோடு சந்திப்பில் நிறுத்தபட்டிருந்த பைக்கை மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 19 பைக்குகள் திருடு போயுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.