திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:24 am

DIN

தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்பொருட்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழில் பொருட்காட்சியைத் தொடக்கிவைத்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் கொடூா், மதுரை சக்கிமங்கலம், திருச்சி மணப்பாறை, திருவள்ளூா் மாவட்டம் காவேரிராஜபுரம் ஆகிய இடங்களில் புதிதாக நான்கு தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ளன. விரைவில் தொழில் முனைவோருக்கு தொழில் மனைகள் ஒதுக்கப்படும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் மனைகளின் அதிக விலையால், 1,341 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தன. அவற்றின் விலை குறைக்கப்பட்டதால், இதுவரை 855 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில் சிட்கோ தொழிற்பேட்டைகளில் எந்த சீரமைப்புப் பணிகளும் நடைபெறாமல் இருந்தன. இப்போது அந்தப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் நிகழாண்டில் ரூ.1.73 கோடியில் சாலை அமைத்தல், மழைநீா் வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் அருண்ராய், சிட்கோ நிா்வாக இயக்குநா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.