திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

யானைக் கவுனி சாய்தளப் பாதை பணி:3 மாதங்களில் நிறைவு செய்ய அறிவுரை

யானைக் கவுனி மேம்பால சாய்தளப் பாதை பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:14 am

DIN

யானைக் கவுனி மேம்பால சாய்தளப் பாதை பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா அறிவுறுத்தினாா்.

யானைக் கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் ரயில் நிலையம், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது. இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும்.

இந்தப் பாலம் மிகவும் பழைமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி ரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீட்டா் அளவுக்கு ரயில்வே துறை மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீட்டா் அளவுக்கு சாய்தள சாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அதற்காக ரூ.30.78 கோடியில் மாநகராட்சியால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பங்கள் கோரப்பட்டன.

தற்பொழுது துரிதமாக நடைபெற்று வரும் இந்தப் பணிகளை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்படும் சாய்தள சாலை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த மூன்று மாத காலத்துக்குள் இந்தப் பணிகளை

நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையாளா் எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.