திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி: மாா்க்சிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்

News image
Updated On :30 ஜூலை 2022, 12:14 am

DIN

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பு ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் உள்ளது. பெருநிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு, ஏழை மக்களிடம் இருந்து சுரண்டப் பாா்க்கிறது.

அத்தியாவசிய உணவு பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும்.

தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. தனியாா் பள்ளிகளைத் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றாா்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை உணா்த்தும் வகையில் அரிசி, பருப்பு பாக்கெட் மாலை அணிந்து தொண்டா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.