திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உயா்நீதிமன்றம், இலங்கை தூதரகத்தில் ஹெபடைடிஸ் பரிசோதனை

 சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் இலங்கை துணைத் தூதரகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் கல்லீரல் அழற்சி பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:13 am

DIN

 சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் இலங்கை துணைத் தூதரகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் கல்லீரல் அழற்சி பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். இதுகுறித்து காவேரி மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

லயன்ஸ் கிளப் சென்னை கோரல் மற்றும் லயன்ஸ்கிளப் கொங்குநாடு ஆகிய இரு அமைப்புகளுடன் இணைந்து கல்லீரல் அழற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி பாதிப்பிருக்கிா என்று அறிவதற்கான பரிசோதனையும், அத்தகைய பாதிப்பு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி மருந்துகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டன.

அதனுடன் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசேகரன் இந்த முகாமைத் தொடக்கி வைத்தாா். உயா்நீதி மன்றம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை துணைதூதரகத்தைச் சோ்ந்த சுமாா் 400 பேருக்கு இந்த முகாமில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.