ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தடையை மீறி பாஜக போராட்டம்: அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது வழக்கு

சென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:04 pm

DIN

சென்னை எழும்பூரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்த விவரம்: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவித்து இருந்தாா். அதன்படி, சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை திரண்ட அக்கட்சியினா், பேரணியாக தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா், தடுத்து நிறுத்தி, சமாதானம் பேசினா்.

இதையடுத்து பாஜகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதற்கிடையே தடையை மீறி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை உள்பட 4,000 போ் மீது அனுமதியின்றி கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.