தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!

சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. 

Published On :


 
சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. 

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் ரூ.2,508க்கு விற்பனையாகி வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சமயைல் எரிவாயு உருளை விலையை  எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன.
 
அதன்படி, 19 கிலோ எடைக்கொண்ட உருளை ஒன்றுக்கு ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.2,373 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றம் எதுவுமில்லாமல் ரூ.1018.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.