வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இடையப்பட்டி மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி வில்வனூர் மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News image
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி
Updated On :1 ஜூன் 2022, 6:16 am

DIN

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையபட்டி வில்வனூர் மாயவப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Story image

சேலம் மாவட்டம் இடையப்பட்டி வில்வனூர் கிராமத்தில் கரியக்கோயில் ஆற்றங்கரையில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத மாயவப் பெருமாள் திருக்கோயகல் அமைந்துள்ளது. இக்கோயில், இடையப்பட்டி மற்றும் வில்வனூர் கிராம மக்களின் முயற்சியால் மகாமண்டபம் ராஜகோபுரத்தோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.  

Story image

இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை வெகு விமர்சியாக நடைபெற்றது யாகசாலை பூஜைகளுக்கு பிறகு ராஜகோபுரம் மற்றும் மாயவப் பெருமாளுக்கு புனிதநீர் ஊற்றி வேதவிற்பன்னர்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

Story image

இந்த விழாவில், இடையப்பட்டி, வில்வனூர், புதூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இடையப்பட்டி  மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.