அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெட்ரோல் விலை விவகாரம்: அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு

பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு

News image
Updated On :1 ஜூன் 2022, 5:28 am

DIN


பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று கே.அண்ணாமலை அறிவித்திருந்தாா்.

அதன்படி, பேரணிக்காக எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் எச்.ராஜா, வி.பி.துரைசாமி, நயினாா் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன் உள்பட ஆயிரக்கணக்கான பாஜகவினா் செவ்வாய்க்கிழமை காலை திரண்டனா்.

அதைத் தொடா்ந்து, கே.அண்ணாமலை தலைமையில் பாஜகவினா் கோட்டையை நோக்கி கோஷங்களை எழுப்பியபடியே பேரணியாகச் சென்றனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினா் பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து பாஜகவினா் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் மீது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரி உத்தரவைா மீறி செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, திமுக அரசு போடும் பொய் வழக்குகளைச் சந்திக்க பாஜக தயாராகவே இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.