சென்னை: முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி, போக்குவர்த்துத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு, மாற்றுத்திறனாளிகள், தங்களின் உரிமைகளை முழுவதுமாக அனுபவிக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பது, மாற்றுத்திறனாளிகளின் சிக்கலை உடனடியாக தீர்ப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளையும் வழங்கும். இந்த குழு பரிந்துரைப்பதை தமிழக அரசு வரும் நாட்களில் திட்டமாக செயல்படுத்தும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மேம்பாடு என்ற அடிப்படையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி படிவத்தில் கோரப்படவில்லை: மீனாட்சி நடராஜன்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

முடிவுக்கு வரும் ஈரான் - அமெரிக்கா போர்! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
விடியோக்கள்

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



