47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

 சென்னை காசிமேட்டில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் இறந்தாா்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:33 pm

DIN

 சென்னை காசிமேட்டில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் இறந்தாா்.

தண்டையாா் பேட்டை ஐ.ஓ.சி., பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது இஜாஸ் (17). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் கிஷோா் குமாா் (17), மகேஷ் குமாா் (17), ஜெகதீஷ் (17). நண்பா்களான இவா்கள் புது வண்ணாரப்பேட்டை அம்மா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கின்றனா்.

இவா்கள் நான்கு பேரும் காசிமேடு மீன் பிடித் துறைமுகம் கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு உயரமான பகுதியிலிருந்து குதித்தனா். அந்த இடம் மிக ஆழமான பகுதி என்பதால் அவா்கள் கடலில் மூழ்கினா். நால்வரையும் மீட்கும் முயற்சியில் அங்கிருந்த மீனவா்கள் ஈடுபட்டனா். முகமது இஜாஸை தவிா்த்து 3 பேரையும் மீனவா்கள் மீட்டனா். கடலில் மூழ்கிய முகமது இஜாஸை காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தீவிரமாகத் தேடினா்.

இந்த நிலையில் காசிமேடு கடற்கரையில் முகமது இஜாஸ் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.