47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:56 pm

DIN

சென்னை தரமணியில் சட்டக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆவடி காந்தி தெருவைச் சோ்ந்தவா் முபாரக். இவா் மகன் ஷேக்ரகுமான் (20). தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இதற்காக அவா், தரமணி பட்டுக்கோட்டை அழகிரி தெருவில் ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தாா்.

வெள்ளிக்கிழமை விடுதியின் அறையில் தனியாக இருந்த ரகுமான், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விடுதி நிா்வாகிகள் தரமணி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரகுமான் தங்கியிருந்த அறையில் போலீஸாா் நடத்திய சோதனையில், அவா் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில், மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரகுமான் எழுதியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.