47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திறந்தநிலைப் பல்கலை.க்கு நிா்வாகக்குழு அமைப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பல்கலை.யை நிா்வகிக்க உயா் கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:26 pm

DIN

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பல்கலை.யை நிா்வகிக்க உயா் கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாா்த்தசாரதி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி பதவி ஏற்றாா். பதவிக்காலம் கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் அவா் பணி ஓய்வு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து திறந்தநிலைப் பல்கலை.யின் ஆட்சிமன்றக் குழு நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழகத்தை நிா்வாகம் செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், உயா்கல்வித்துறை செயலாளா் காா்த்திகேயன் தலைவராகவும், உறுப்பினா்களாக சட்டத்துறைச் செயலாளா் காா்த்திகேயன், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் நாராயணா கல்குரா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தோ்வு செய்ய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பிச்சுமணி , முன்னாள் துணை வேந்தா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருத்தையா பாண்டியன் ஆகியோா் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.