
சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் சப்தமாக போன் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.
பேருந்துகளில் சப்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால், இவற்றுக்கு தடை விதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி மனு அளித்திருந்தார்.
இதையும் படிக்க | விரைவில் தமிழக பேருந்துகளில் ‘இ-டிக்கெட்’ அறிமுகம்
இதனைத் தொடர்ந்து, பேருந்துகளில் சப்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, விடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.