தமிழகம் முழுவதும் தனியார் ஸ்கேன் நிறுவனத்தில் சோதனை

தமிழகம் முழுவதும் தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி கிளை
கோவில்பட்டி கிளை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்கேன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடபழனி, நங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி, கோவில்பட்டி உள்பட தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிளைகளில் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com