தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மதுரை கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து: உயிர் தப்பிய பக்தர்கள்

மதுரை சந்தன மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:03 am

DIN

மதுரை சந்தன மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில், கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது.

கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்க பட்டதாக கூறப்படுகிறது. 

அதிலிருந்து வந்த தீயானது பந்தலில் பட்டு பரவத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமானது.

மேலும், கோவிலை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.