மதுரை சந்தன மாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடைகள், இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில், கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது.
கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கோவில் திருவிழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்க பட்டதாக கூறப்படுகிறது.
அதிலிருந்து வந்த தீயானது பந்தலில் பட்டு பரவத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமானது.
மேலும், கோவிலை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருள்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்தது ஏன்?

அரசியலில் இல்லையென்றால் விண்வெளி தொழில்முனைவோராக இருந்திருப்பேன்: ராகுல்
'நான் முதல்வன் திட்டம் உதவியது' - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற காஞ்சிபுரம் கிருபாகரன்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

