ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் அருகே நள்ளிரவில் மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து

காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மின்மாற்றி  வெடித்து சிதறியதால் அருகில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியே

News image
காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ
Updated On :11 ஜூன் 2022, 6:23 am

DIN

காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மின்மாற்றி  வெடித்து சிதறியதால் அருகில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட சின்னயங்குளம் பகுதியில் மின்மாற்றியில் பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீ பொறி ஏற்பட்டுள்ளது. அப்போது பொதுமக்கள் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மின்சாரத் துறை அதிகாரிகள் யாரும் இந்த சம்பவத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை

காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம்பிடித்தனர்.

உடனே, காஞ்சிபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5  தீயணைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்

தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.

மின்சாரத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தீ விபத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றியை மாற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கும் பணிக்காக கூடுதல் வசூல் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.