ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயில்களை தனியாருக்கு  விற்பதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

விரைவு ரயில்களை தனியாருக்கு  விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

ரயில்களை தனியாருக்கு  விற்பதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

Updated On :14 ஜூன் 2022, 5:35 am

DIN

விரைவு ரயில்களை தனியாருக்கு  விற்பனை செய்வதை கண்டித்து ஈரோட்டில் ரயில்வே ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறையின் மூலம்  பல்வேறு மாநிலங்களில் விரைவு ரயில்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Story image

முதன் முறையாக தென்னக  ரயில்வேயின் மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டு கோவையில் இருந்து சீரடி வரை செல்லும் விரைவு ரயில் இன்று புறப்படுகிறது.

Story image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரயில்வே துறையை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும் ஈரோடு ரயில்வே பணிமனை முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுற்றுலா என்ற பெயரில் கோவை முதல் சீரடி வரை விரைவு ரயிலை தனியாருக்கு விற்றதை விலக்கிகொள்ள வேண்டும் என்றும் பாரத் கௌரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கருப்பு தின ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.