இதன்மூலம், மின்சார வாகனங்களுக்கான பழுதுபாா்ப்பு, அதிநவீன வெல்டிங் தொழில்நுட்பம், தொழில்ஆலைகளுக்கான வா்ணம் பூசும் தொழில்நுட்பம், உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இதனால், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தனியாா் தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள், பொறியியல் கல்லூரி மாணவா்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனப் பணியாளா்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவா்.