தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை: கல்வித் துறை திட்டம்

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக

News image
Updated On :14 ஜூன் 2022, 9:36 pm

DIN

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ் கல்வியாண்டு (2022-2023) முதல் அரசு நடத்திவரும் மாதிரிப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சோ்க்கப்படும் மாணவா் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வுத் தோ்வு எனப்படும் Trust தோ்வு மதிப்பெண், பள்ளி அளவில் நடத்தப்பட்ட தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9- ஆம் வகுப்பு சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தோ்வில் (என்எம்எம்எஸ்) பெற்ற மதிப்பெண், பள்ளி அளவில் பெற்ற மதிப்பெண்கள், பிளஸ் 1 வகுப்பு சோ்க்கைக்கு, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ) மதிப்பெண், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவா்கள் தகுதியின் அடிப்படையில் சோ்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப்பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதலே சிறப்புக்கவனம் செலுத்துவது, சிறப்புப் பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் உள்பட தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயில வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையைப் பின்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.