துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருச்சி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஜூன் 2022, 9:44 am

DIN

திருச்சி இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே, வெங்கடாஜலபுரத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (66). அவரது மகன் நெப்போலியன் (39). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (69) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆரோக்கியசாமி அவரது மனைவி தனமேரி (65), மகன் சசிகுமார் (41), ஆகியோர் சேர்ந்து, தனிஸ்லாஸ், நெப்போலியன் ஆகியோரை குத்து கோலால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் இறந்தனர்.

இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து, சசிகுமார், ஆரோக்கியசாமி, தனமேரி ஆகியோரை கைது செய்தார்.

திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனவேல், இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும், ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனமேரிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.