திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் வானில் வெடிச்சப்தம்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை வானில் கடும் புகையுடன் வெடிச்சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வானில் சப்தத்துடன் வட்ட வடிவில் எழுந்த புகை.
வானில் சப்தத்துடன் வட்ட வடிவில் எழுந்த புகை.
Published on
Updated on
1 min read



வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை வானில் கடும் புகையுடன் வெடிச்சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளக்கோவிலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் கோவை சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. அங்கிருந்து புறப்படும் பயிற்சி விமானங்கள் 150 கிலோ மீட்டர் சுற்றளவில் அடிக்கடி பலத்த இறைச்சலுடன் சென்று வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயில் அருகே பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் விழுந்ததாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறையினர், ஊடகத் துறையினர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். பகல் மணி 12.30 நிலவரப்படி உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com