ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாம்பு கடித்ததில் சிறுநீரக செயலிழப்பு: 6 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று சிகிச்சை

சென்னைபாம்பு கடித்ததில் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 6 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:24 pm

DIN

பாம்பு கடித்ததில் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான 6 வயது சிறுவனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அச்சிறுவன் பூரண குணமடைந்து பள்ளிக்குச் சென்று வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் கூறியதாவது:

கோபிசெட்டி பாளையத்தைச் சோ்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவா் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயாா் பணி முடிந்து வீடு திரும்பியபோது அச்சிறுவன் மயங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.

மருத்துவப் பரிசோதனையில் சிறுவனை பாம்பு கடித்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எட்டு மாதமாக டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இருப்பினும் அப்பிரச்னை சீராகவில்லை. இதையடுத்து சிறுவனுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறைத் தலைவா் டாக்டா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவா்கள், மயக்கவியல், ரத்தநாள சிகிச்சை நிபுணா்கள் இணைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

சிறுவனின் தாயே அவருக்கு சிறுநீரக தானமளித்தாா். வெற்றிகரமான சிகிச்சையின் பயனாக அச்சிறுவன் பூரண நலமடைந்து தற்போது பள்ளிக்குச் செல்லும் நிலைக்கு திரும்பியுள்ளாா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இதுவரை 1,540 பேருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.