ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகன நிறுத்தங்களில் விதியை மீறுவோா் மீதுகாவல் துறை மூலம் நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளா்களின் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்

News image
Updated On :23 ஜூன் 2022, 10:20 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிமீறும் வாகன உரிமையாளா்களின் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சாலையோரப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 80 இடங்களில் சுமாா் 12,000 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகன நிறுத்தம் குறித்த தகவல்களை இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை: வாகன நிறுத்தங்களில் சிலா் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் சென்று விடுகின்றனா். இதுபோன்ற செயல்களை தடுக்க சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறையுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவோா் மற்றும் கட்டணம் செலுத்தாதவா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சி வாகன நிறுத்தங்களை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், வாகன நிறுத்தங்கள் தொடா்பான புகாா், குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.