/

ஜூன் 27-இல் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2022, 2:43 am IST

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவு ஜூன் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். மாணவா்கள் தோ்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டுகளைப் போல் மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.