திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கொடிசியாவில் வர்த்தக கண்காட்சி: நாளை தொடங்கிவைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

News image
Updated On :24 ஜூன் 2022, 7:46 pm IST

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், பிற்பகல் 2.40 மணியளவில் கோயம்புத்தூர் வந்தடைகிறார். பின்னர் மருத்துவ துணிகளுக்கான தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க சிறப்பு மையத்திற்கு சாலை வழியாக பயணம் செய்யும் மத்திய அமைச்சர், அங்கு கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகக் கண்காட்சியை பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி வலைப்பின்னல் சில்லரை வியாபாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6.20 மணியளவில் தென்னிந்திய மில்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் பியூஷ் கோயல், தொடர்ந்து தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் அவர்களுடன் இரவு நேர விருந்தில் கலந்துகொள்கிறார். 2-ஆவது நாளான ஜூன் 26 (ஞாயிறு) காலை 10.40 மணியளவில் திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்காவை அவர் பார்வையிடுகிறார். 

பின்னர் நண்பகல் வாக்கில் பாப்பீஸ் ஓட்டலில் ஏற்றுமதியாளர்களை சந்திக்கும் மத்திய அமைச்சர், அங்கு நடைபெறும்  பாராட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பங்கேற்கும் 2 நாள்  நிகழ்ச்சிகளிலும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்கிறார். 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பின் கோயல், ஜூன் 26 பிற்பகல் 3.15 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து தில்லி புறப்பட்டு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.