இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொடிசியாவில் வர்த்தக கண்காட்சி: நாளை தொடங்கிவைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

News image
Updated On :24 ஜூன் 2022, 2:16 pm

DIN

மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார்.  

புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், பிற்பகல் 2.40 மணியளவில் கோயம்புத்தூர் வந்தடைகிறார். பின்னர் மருத்துவ துணிகளுக்கான தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க சிறப்பு மையத்திற்கு சாலை வழியாக பயணம் செய்யும் மத்திய அமைச்சர், அங்கு கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகக் கண்காட்சியை பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி வலைப்பின்னல் சில்லரை வியாபாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 6.20 மணியளவில் தென்னிந்திய மில்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் பியூஷ் கோயல், தொடர்ந்து தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் அவர்களுடன் இரவு நேர விருந்தில் கலந்துகொள்கிறார். 2-ஆவது நாளான ஜூன் 26 (ஞாயிறு) காலை 10.40 மணியளவில் திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்காவை அவர் பார்வையிடுகிறார். 

பின்னர் நண்பகல் வாக்கில் பாப்பீஸ் ஓட்டலில் ஏற்றுமதியாளர்களை சந்திக்கும் மத்திய அமைச்சர், அங்கு நடைபெறும்  பாராட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பங்கேற்கும் 2 நாள்  நிகழ்ச்சிகளிலும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்கிறார். 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பின் கோயல், ஜூன் 26 பிற்பகல் 3.15 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து தில்லி புறப்பட்டு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.