அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர்: தமிழ்மகன் உசேன்

அதிமுகவில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். 
தமிழ்மகன் உசேன்
தமிழ்மகன் உசேன்
Published on
Updated on
1 min read


அதிமுகவில் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். 

அதிமுகவில் புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சென்னை காமராஜர் சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஒற்றைத் தலைமையே விரும்புகின்றனர். அதிமுகவுக்கு எடப்பாடி கே.பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என விரும்புவதாக கூறினார். 

அவைத்தலைவர் பணி சவாலான பணி என்றாலும், அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி செல்வேன் என்று தமிழ்மகன் உசேன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com