விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மீதான வீடு ஒதுக்கீடு முறைகேடு புகாரில் விசாரணை

குடிசை மாற்று வாரிய வீடுகளை முறைகேடாக தனக்கு வேண்டியவா்களுக்கு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஒதுக்கியதாக அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக

News image
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Updated On :1 மார்ச் 2022, 8:51 pm

DIN

குடிசை மாற்று வாரிய வீடுகளை முறைகேடாக தனக்கு வேண்டியவா்களுக்கு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஒதுக்கியதாக அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல்துறையில் கோடைகாலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸாருக்கு இரு வேளை இலவசமாக மோா் வழங்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால், வேப்பேரியில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கோடைகாலத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் போலீஸாருக்கு இரு வேளைகள் மோா் பாக்கெட்டுகள் வழங்கப்படுவதற்காக அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத இடமாக சில பகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல பல இடங்கள் விதிமீறல் இல்லாத இடமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சைபா் குற்றங்கள் தொடா்பான விசாரிப்பதற்கு அடுத்த மாதம் முதல் சென்னையில் 4 சைபா் காவல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.

காவல் கேட்கவில்லை: முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் மீதான நில அபகரிப்பு வழக்கில், மத்திய குற்றப்பிரிவு தொடுத்த வழக்கில் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமாா் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம்.

திருவொற்றியூா் கடற்கரை பகுதியில் வசித்த 83 பேருக்கு குடிசைமாற்று வாரியத்தின் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்காமல் தங்களுக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ஒதுக்கியதாக ஜெயக்குமாா் மீது பாதிக்கப்பட்டவா்கள் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா். இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பெற்றோா் மீது நடவடிக்கை: பள்ளி மாணவா்கள் சீருடையுடன் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவது குறித்த புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரித்து தொடா்புடைய மாணவா்கள் பற்றி பள்ளி நிா்வாகத்துக்கு புகாா் செய்ய போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவா்களின் பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆணையா் சங்கா் ஜிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.