அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருச்சி மேயராக திமுக மு.அன்பழகன் போட்டியின்றித் தேர்வு          

திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:07 am

DIN

திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், அமமுக ஓர் இடத்தையும், சுயேச்சைகள் 2 இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இன்று நடைபெற்ற மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக கூட்டணியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மட்டுமே வந்திருந்தனர். திமுகவைச் சேர்ந்த 27வது வார்டில் வெற்றி பெற்ற மு.அன்பழகன் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஏகமனதாக மேயராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து மேயர் இருக்கையில் அமரச் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேயர் அன்பழகன், மறைந்த திமுக தலைவர்  கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயரைக் குறிப்பிட்டு உறுதி மொழியேற்றார். பின்னர், மாமன்றக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். மாநகராட்சிக்கு வெளியே திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் வெற்றியை கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.