அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோவை மேயராக கல்பனா பதவியேற்பு

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று திமுக கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது.

News image
கோவை மேயராக கல்பனா பதவியேற்றுக் கொண்டார்.
Updated On :4 மார்ச் 2022, 6:46 am

DIN

கோவை: கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று திமுக கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது.

இதையடுத்து, கோவை மேயராக 19 ஆவது வார்டு உறுப்பினர் கல்பனா, துணை மேயராக 92 ஆவது வார்டு உறுப்பினர் வெற்றிச்செல்வனை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்றுக் கொண்டனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோலை அளித்து கல்பனாவை மேயர் நாற்காலியில் அமர வைத்தார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முதல் கையெழுத்தாக, பீளமேடு பகுதி 26 ஆவது வார்டு, பயணியர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில்  கழிப்பிடம் கட்டுவதற்கான கோப்பில் கைழுத்திட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.