அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

News image
திமுக வேட்பாளர் சூர்யா ஷோபன் குமார் தனது ஆதரவாளர்களுடன் மாநகராட்சி அலுவலகம் வந்தார்.
Updated On :4 மார்ச் 2022, 5:38 am

DIN

காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 50 மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் 26 பேர் வாக்களிப்பவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர மேயர் தேர்தல் மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூட்டத்தில் ஆணையரும் தேர்தல் அலுவலருமான ப.நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

திமுக தலைமை கழகம் மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மகேஸ்வரி யுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த டாக்டர் சூர்யா சோபன் குமாரும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திமுக வேட்பாளரான சூர்யா ஷோபன் குமாரும் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதால் பாமக, சுயேச்சைகள், அதிமுக, பாஜக ஆகியோர் இணைந்து சூர்யா சோபன் குமாருடன் தேர்தல் நடைபெறும் இடத்துக்கு வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் மேயர் தேர்தலில் காஞ்சிபுரத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் 31 நபர்கள் வெற்றிபெற்று இருந்தபோதும் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

இதனால் காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.