அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேலூர் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்வு

வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :4 மார்ச் 2022, 6:55 am

DIN

வேலூர்: வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 44 வார்டுகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, வேலூர் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு 31ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் பொறுப்புக்கு 8ஆவது வார்டில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சுனில்குமார் ஆகியோர் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வேலூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற அரங்கில் வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, மேயர் பொறுப்புக்கு சுஜாதா ஆனந்தகுமார் மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததுடன், மேயர் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.

தொடர்ந்து மேயர் சுஜாதா ஆனந்தகுமாருக்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். மறைமுகத் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் அவைக்கு வரவில்லை. தொடர்ந்து துணைமேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.