ஆத்தூர் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நிர்மலாபபிதா மணிகண்டன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
33 உறுப்பினர்களைக் கொண்ட நகர்மன்றத்தில் 28 பேர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் வெற்றி பெற்ற சான்றிதழை வழங்கினார்.
அனைத்து உறுப்பினர்களும் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிள் நகரமன்றத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.