தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், திமுக 7 வார்டுகளிலும், அமமுக வார்டு, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், திமுக சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 15-வது வார்டு உறுப்பினர் மு.பவானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் 11-வது வார்டு உறுப்பினர் அ.மிதுன்சக்கரவர்த்தி போட்டியிட்டார்.
தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், அமமுக வேட்பாளர் அ.மிதுன்சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் இருவரில், ஒருவர் திமுகவிற்கும், மற்றொருவர் அமமுகவிற்கும் ஆதரவளித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமமுக வேட்பாளர் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதாக அமமுக நிர்வாகிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சோளிங்கா் அருகே தம்பதி தற்கொலை

திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மையத்தில் ‘திறனகம்’

ரயிலில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

