‘அதிமுகவிற்கு சசிகலா தலைமையே தேவை’: ஓபிஎஸ் சகோதரர் கருத்து

அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலாவை  திருச்செந்தூரில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா சந்தித்து பேசினார். 

அதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஓ.ராஜா நீக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஓ.ராஜா, “உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைபாளரும் தான் காரணம். அதிமுகவிற்கு சசிகலா தலைமையே வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “எனக்கு பொதுச்செயலாளர் சின்னம்மாதான். நான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் பணியாற்றி வந்துள்ளேன். என்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது” என ஓ.ராஜா தனது பேட்டியில் குறிப்பிட்டார். 

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக அக்கட்சிக்குள் நிலவி வரும் சச்சரவுகள் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com