ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.

News image
Updated On :9 மார்ச் 2022, 6:40 pm

DIN

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வியாழன், வெள்ளி (மாா்ச் 10,11) ஆகிய இரண்டு நாள்களும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 70 மி.மீ., திருச்செந்தூரில் 20 மி.மீ., சாத்தான்குளத்தில் 10 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.